எங்க ஊரு நகரப்பேருந்து,
சமயத்தில் நகரா,
, பெருமளவு,..நரகப்பேருந்து.
பழகிட்டு...
வேகமா'போறேன்னு விலா ஒடிக்காது;
நின்னு போனாலும், வேற ஒன்னு வரும்.
என்னைய மாதிரி வயசாளிக்கு பாதுகாப்பு.
அன்றைக்கு மழை.
வெளியே தூற,
உள்ளே கொட்டுகிறது .
குந்த இடமின்றி
எழும்பிய பயணியருடன்
நிற்போரும் நெரிய
மண்டும் எரிச்சலில்
மானாங்காணியாய்
.. வசவு மழை!
களேபாரத்துக்கிடையே
கெக்கலி கொட்டியது
ஒரு குழந்தை,
தாயின் இடுப்பில் இருந்தபடியே
தாரையாய் வடியும்
மழை நீரை
பிஞ்சுக்கைகளில்
பிடிக்க முனைந்து
களித்து , வெடித்து, சிரித்து
கும்மாளியிட்ட
குழந்தையை நினைந்தும்,
நனைந்தும்
மழலை மழையில்
நான்.
சூழலை அப்படியே ஜிலுஜிலுப்பாய் மாற்றிய மழலைக்கு ஒரு ஜே!
பதிலளிநீக்கு