மொத்தப் பக்கக்காட்சிகள்

9.12.2011

            எங்க ஊரு நகரப்பேருந்து,
            சமயத்தில் நகரா,
,           பெருமளவு,..நரகப்பேருந்து.
            பழகிட்டு... 
            வேகமா'போறேன்னு விலா ஒடிக்காது;
            நின்னு போனாலும், வேற ஒன்னு வரும்.
            என்னைய மாதிரி வயசாளிக்கு பாதுகாப்பு.

            அன்றைக்கு மழை.
            வெளியே      தூற, 
            உள்ளே கொட்டுகிறது .
            குந்த இடமின்றி 
            எழும்பிய பயணியருடன்
             நிற்போரும்    நெரிய
             மண்டும் எரிச்சலில் 
             மானாங்காணியாய் 
..            வசவு மழை! 

               களேபாரத்துக்கிடையே
               கெக்கலி கொட்டியது
               ஒரு குழந்தை,
               தாயின் இடுப்பில் இருந்தபடியே 
               தாரையாய் வடியும்             
               மழை நீரை
               பிஞ்சுக்கைகளில்
               பிடிக்க முனைந்து 
               களித்து , வெடித்து, சிரித்து 
               கும்மாளியிட்ட
               குழந்தையை நினைந்தும்,
                நனைந்தும் 
                மழலை மழையில் 
                நான்.
     

1 கருத்து: